Kidney Ailment (Tamil)
இழந்த சீறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்கான இயற்கை வழி
(Rejuvenating lost kidney function through Ayurveda)
2006ஆம் ஆண்டு மே மாதம் எனது தந்தை சிறு நீரக செயலிப்பினால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதற்கு முன்னர் அவருக்கு எவ்வித சிறு நீரக பிரச்சினையும் எற்பட்டதில்லை. அவரது சிறு நீரகசெயல்பாடு 5% (50 மி.லி சிறுநீர் வெளியெற்றம் ஒரு நாளைக்கு)கீழ் சென்றுவிட்டது.
முதல் [...]
மருத்துவர் இனி குணமடைய வாய்ப்பு கிடையாது என்று கையை விரித்துவிட்ட நிலையிலும் கீழ் காணும் இயற்கை வழியை பின்பற்றி இரண்டே மாதத்தில் எனது தந்தையின் சிறுநீரகம் 80% (650-700 மி.லி சிறுநீர் வெளியெற்றம்ாளைக்கு) செயல்பாட்டை திரும்ப பெற்று இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
மருத்துவர்கள் தெய்வங்களல்ல. அவர்கள் கூறுவதை முழுதும் கடைப்பிடிக்காதீர்கள். அவர்களை விட நமக்கு தான் நமது உடலை பற்றி நன்கு தெரியும்.
இஞ்சி ஒத்தடம்
- ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
- 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
- அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டைப்போல் கட்டவும்.
- இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சி சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
- அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
- பிறகு அடுப்பையை அனைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
- சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
- பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரி ல் நனைத்து புளிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சீறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அ டிபகுதியில் விரித்து போடவும்.
- சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
தியானம்
மனித எண்ணத்திற்கு சக்தியுண்டு. தியானம் செய்ய நீங்கள் பெரும் முனிவராகவோ, மந்திர தந்திரங்கள் அறிந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து, மனதை ஒரு நிலைப்படுத்தி உங்கள் சிறுநீரகத்தை பற்றி எண்ணுங்கள். சிறுநீரக செல்கள் புத்துனர்வு அடைந்து மீண்டும் இயங்குவதை உங்கள் அக (மன) கண்ணாடியில் கண்டு மகிழுங்கள். எல்லாம் நன்மைக்கேயென்று எண்ணுங்கள், நம்புங்கள். நம்பிக்கைதான் ஆயுர்வேதம் மட்டுமல்ல அனைத்து மருத்துவ முறைகளுக்கும் முதல் படி.
பாத மசாஜ்
நமது பாதத்தில் 7000 நரம்பு முடிவுகள் உள்ளன. ஆயுர்வேதத்தின் படி, பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்பு தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இச்செய்கை சிறுநீரகத்தை புத்துனர்வு அடைய செய்கிறது.
உணவு முறை
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவு கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும். மேலே கூறிய அனைத்தையும் கடைபிடித்து உணவு முறையில் ஒழுக்கமில்லையெனில், யாவும் பயனற்றதாகிவிடும்.
சோடியம்
உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். மனிதனால் உப்பின்றி வாழ இயலும், 50 லட்சம் ஆண்டுகள் உப்பின்றிதான் வாழ்ந்தான். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். அதிக உப்பு கால்சியத்தை இழக்க செய்து, எழும்பு நோய்களுக்கு வித்திடுகிறது. உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும்.
நீ ங் கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக்கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்)
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பாதாம் பருப்புகள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
சிறுநீரக செயலிழப்பின் பொழுது, அதிக புரதம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இரத்ததில் யூரியாவின் அளவு அதிகரித்து நரம்புமண்டலத்தில் கோளாறு ஏற்படும். இதனால் பசியின்மை, சுவை வேறுபாடுகள், தோல் கருமையடைதல் ஆகியன நிகழும்.
நீர்
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ளவேண்டியவை
ஒமம்
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி
புளியிலுள்ள டார்டரேட் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இன்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீர பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்
மஞ்சள் இந்திய உணவுகளின் ஒர் தவிர்க்க முடியா கலவையாகும். மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்& பழங்கள்
- காய்கறிகள்: பூண்டு, வெங்காயம், காரட், கத்ரிக்காய்முள்ளங்கி, பச்சை பட்டாணி, முட்டைகோஸ், காலிபிளவர.
- பழங்கள்: ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி
- எண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்கவேண்டியவை
- காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவல்லி கிழங்கு
- பழங்க்ள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உளர் பழங்கள்
- பழச்சாறுகள்: ஆரன்ஜு, காய்கறி சாறுகள், கூல்ட்ரிங்ஸ்.
ஒழுக்கம்
மேலே கூறியவற்றை ஒழுக்கத்துடன் உங்களை ஏமாற்றாமல் நம்பிக்கையுடன் கடைபிடித்தால் சிறுநீரக பிரச்சனைகள் தீரும்.
-->